என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாட்டு வண்டிகள் பறிமுதல்"

    • திருவெண்ணைநல்லூர் பகுதிகளிலுள்ள மலட்டு ஆற்றில் இரவு நேரங்களில் தொடர் மணல் கொள்ளை நடக்கிறது.
    • போலீசார் 6 மாட்டு வண்டிகளையும் காந்தி குப்பம் பகுதியில் மணல் அள்ளிக் கொண்டிருந்த 4 மாட்டு வண்டிகளையும் மடக்கிப்பிடித்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் பகுதிகளிலுள்ள மலட்டு ஆற்றில் இரவு நேரங்களில் தொடர் மணல் கொள்ளை போவதாக விழுப்புரம் மாவட்ட போலீ ஸ்ரீ நாதாவுக்கு ரகசிய தகவல் சென்றது. அதன்பேரில் திருவெண்ணைநல்லூர் பகுதிகளில் எஸ்பி தனிப்படபடை டிஎஸ்பி பார்த்திபன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    புதுப்பாளையம் ஆற்றுப் பகுதியில் மணல் அள்ளிக் கொண்டிருந்த 6 மாட்டு வண்டிகளையும் காந்தி குப்பம் பகுதியில் மணல் அள்ளிக் கொண்டிருந்த 4 மாட்டு வண்டிகளையும் மடக்கிப்பிடித்தனர் அனைவரும் தப்பி ஓடிவிட்டனர். அதன்பின்னர் 10 மாட்டு வண்டிகளையும் திருவெண்ணைநல்லூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்து 10 மாட்டு வண்டி உரிமையாளரையும் திருவெண்ணெய்நல்லூர் போலீசார் தேடி வருகின்றனர்.

    மணல் கடத்திய மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் அருள் செல்வம் தனி பிரிவு தலைமை போலீசார் சரவணன் தலைமையிலான போலீசார் நேற்று இரவு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அனுமதி இன்றி ஆற்றில் மணல் அள்ளிக்கொண்டு 2 மாட்டு வண்டிகள் வந்தது.

    இதை பார்த்த போலீசார் உடனே 2 மாட்டு வண்டிகளை பிடிக்க முயன்றனர். போலீசார் வருவதை கண்டவுடன் மாட்டு வண்டிகளில் மணல் அள்ளி வந்த அதே பகுதியைச் சேர்ந்த அய்யப்பன், அய்யனார் இருவரும் தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

    ×