உள்ளூர் செய்திகள்

சிங்காரப்பேட்டை அருகே கார் டிரைவர் திடீர் மாயம்

Published On 2022-12-10 14:19 IST   |   Update On 2022-12-10 14:19:00 IST
  • இரவு வீட்டைவிட்டு வெளியே சென்ற தயாளன் அதன்பிறகு வீடு திரும்பவில்லை.
  • தயாளனின் மனைவி நர்மதா சிங்காரப்பேட்டை போலீசில் புகார் செய்தார்.

மத்தூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் தயாளன் (வயது 32).கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.நேற்று இரவு வீட்டைவிட்டு வெளியே சென்ற தயாளன் அதன்பிறகு வீடு திரும்பவில்லை.

பல்வேறு இடங்களில் விசாரித்தும் தயாளன் பற்றி எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து தயாளனின் மனைவி நர்மதா சிங்காரப்பேட்டை போலீசில் புகார் செய்தார்.

இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்கு பதிவு செய்து மாயமான தயாளனை தேடி வருகிறார்.

Tags:    

Similar News