உள்ளூர் செய்திகள்

சங்கராபுரம் அருகே பாம்பு கடித்து ஒருவர் பலி

Published On 2022-08-08 08:02 GMT   |   Update On 2022-08-08 08:02 GMT
  • சங்கராபுரம் அருகே பாம்பு கடித்ததில் முதியவர் பலியானார்.
  • அவரது குடும்பத்தினர் லட்சாதிபதியை மீட்டு சிகிச்சைக்காக சங்கராபுரம் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர்.

கள்ளக்குறிச்சி:

சங்கராபுரம் அருகே புதுபாலப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் லட்சாதிபதி (வயது58). இவர் வீட்டிற்கு வெளியே அமர்ந்திருந்த போது பாம்பு கடித்தது. உடனே அவரது குடும்பத்தினர் லட்சாதிபதியை மீட்டு சிகிச்சைக்காக சங்கராபுரம் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கும் கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே லட்சாதிபதி இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News