உள்ளூர் செய்திகள்

சங்கராபுரம் அருகே : நிலத்தகராறில் மோதல்: 2 பேர் மீது வழக்கு

Published On 2022-07-04 08:22 GMT   |   Update On 2022-07-04 08:22 GMT
  • சங்கராபுரம் அருகே நிலத்தகராறில் மோதல் 2 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
  • கோவிந்தனும், இவரது சகோதரர் ஜெயமுருகனும் மாயவனை தாக்கி, அவரது செல்போனை உடைத்தும், கொலை மிரட்டல் விடுத்தனர்.

கள்ளக்குறிச்சி: 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே புதுப்பாலப்பட்டு காட்டுக் கொட்டகையை சேர்ந்தவர் மாயவன் (வயது44). இவருக்கும் பாலப்பட்டு கிராமத்தை சேர்ந்த கோவிந்தன்(46) என்பருக்கும் இடையே நில தகராறு இருந்து வந்தது. சம்பவத்தன்று இந்த பிரச்சினை தொடர்பான விசாரணைக்கு சங்கராபுரம் போலீஸ் நிலையத்திற்கு வந்தனர். அப்போது கோவிந்தனும், இவரது சகோதரர் ஜெயமுருகனும் மாயவனை தாக்கி, அவரது செல்போனை உடைத்தும், கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் கோவிந்தன், ஜெயமுரு–கன் ஆகியோர் மீது சங்க–ராபுரம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் உலக நாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News