உள்ளூர் செய்திகள்

புதுச்சத்திரம் அருகே 2 குழந்தைகளுடன் இளம்பெண் மாயம்

Published On 2022-07-16 08:53 GMT   |   Update On 2022-07-16 08:53 GMT
  • புதுச்சத்திரம் அருகே 2 குழந்தைகளுடன் இளம்பெண் மாயமானார்.
  • கணவருடன் ஏற்பட்ட குடும்ப சண்டையில் கோபித்துக் கொண்டு புவனகிரி அருகே மணிக்கொல்லையில் உள்ள தாய் வீட்டுக்கு சென்றுள்ளார்.

கடலூர்: 

கடலூர் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே உள்ள சிலம்பிமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ். அவரது பவானி (வயது 24). இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகளாகின்றன.2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 14-ந் தேதி அன்று தனது கணவருடன் ஏற்பட்ட குடும்ப சண்டையில் கோபித்துக் கொண்டு புவனகிரி அருகே மணிக்கொல்லையில் உள்ள தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு தங்கி இருந்த பவானி 2 மகள்களுடன் மாயமானார்.அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் பவானி மற்றும் குழந்தைகளை தேடினர். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. எனவேஇதுகுறித்து புதுச்சத்திரம் போலீஸ் நிலையத்தில் தாயார் சாந்தி புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து பவானி மற்றும் குழந்தைகளை தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News