உள்ளூர் செய்திகள்

பர்கூர் அருகே தனியார் நிறுவன உரிமையாளர் காரில் கடத்தல்

Published On 2022-08-07 12:19 IST   |   Update On 2022-08-07 12:19:00 IST
  • மர்ம நபர்கள் காரை மறித்து கடத்தினர்.
  • சிறிது தூரம் சென்ற உடன் கோவிந்தராஜை இறக்கி விட்டனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்த மலையாண்டஅள்ளி பகுதியை சேர்ந்தவர் முனியப்பன். இவரது மகன் கோவிந்தராஜ் (வயது35). இவர் மத்தூரில் தனியார் நிறுவனம் ஒன்று நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் நேற்று மத்தூரில் இருந்து காவேரிப்பட்டணம் செல்வதற்காக திருவண்ணாமலை-கிருஷ்ணகிரி சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது சிட்டோபனஅள்ளி என்ற இடத்தின் அருகே வந்த போது மர்ம நபர்கள் காரை மறித்தனர். பின்னர் கோவிந்தராஜை மற்றொரு காரில் கடத்தி சென்றனர். பின்னர் சிறிது தூரம் சென்ற உடன் கோவிந்தராஜை இறக்கி விட்டனர்.

இது குறித்து அவர் பர்கூர் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News