உள்ளூர் செய்திகள்

மரக்காணம் அருகே சாராயம் விற்ற 2 பேர் கைது

Published On 2022-12-19 12:47 IST   |   Update On 2022-12-19 12:47:00 IST
20 சாராயப்பாக்கெட்களை பறிமுதல் செய்தனர்.

விழுப்புரம்:

மரக்காணம் அருகே வடகோட்டிப்பாக்கம் கிராமத்தில் அம்பேத்கார் தெருவில் வசிப்பவர் கிருஷ்ணன் (வயது 45). இவர் வீட்டின் பின்புறம் உள்ள கருமாரி கொட்டகையில் சாராயம் விற்பதாக மரக்காணம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் வந்தது. அதன் பேரில் மரக்காணம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தீபன் மற்றும் போலீசார் அங்கு சென்று ஆய்வு செய்தனர்.

அப்போது அங்கு சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த கிருஷ்ணனை பிடித்து, அவர் வைத்திருந்த 20 லிட்டர் சாராயம், மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்து, வழக்குப்பதிந்து கைது செய்தனர். அது போல் நடுக்குப்பம் கிராமத்தில் மாரியம்மன் கோவில் தெருவில் பெரிய காலனி பகுதியை சேர்ந்த சேகர் (57) என்பவர் வீட்டின் எதிரே சாராயம் விற்பனை செய்து கொண்டிருதார். அவரிடம் இருந்து 20 சாராயப்பாக்கெட்களை பறிமுதல் செய்தனர். மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

Tags:    

Similar News