உள்ளூர் செய்திகள்
மத்தூர் அருகே விபத்தில் பெங்களூரு வாலிபர் பலி
- நேற்று இருசக்கர வாகனத்தில் திருவண்ணாமலை-பெங்களூரு சாலையில் சென்று கொண்டிருந்தார்.
- இருசக்கர வாகனத்தில் இருந்து நிலைதடுமாறி சாலையில் தவறி விழுந்தார்.
மத்தூர்,
கர்நாடக மாநிலம், பெங்களூரு சி.வி. ராம்நகர் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவரது மகன் பிரதாப் (வயது28). இவர் நேற்று இருசக்கர வாகனத்தில் திருவண்ணாமலை-பெங்களூரு சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அடுத்துள்ள கவுண்டனூர் பகுதியில் வந்த போது இருசக்கர வாகனத்தில் இருந்து நிலைதடுமாறி சாலையில் தவறி விழுந்தார். இதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பிரதாப் உயிரிழந்தார்.
இது குறித்து மத்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.