உள்ளூர் செய்திகள்

கள்ளக்குறிச்சி அருகே பள்ளிக்கு சென்ற ஆசிரியை திடீர் மாயம்

Published On 2022-08-08 06:48 GMT   |   Update On 2022-08-08 06:48 GMT
  • கள்ளக்குறிச்சி அருகே பள்ளிக்கு சென்ற ஆசிரியையை காணவில்லை.
  • பாபு தினமும் தனது மனைவியை மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்று அண்ணா நகரில் உள்ள பள்ளியில் விடுவதும், மீண்டும் மாலையில் அழைத்து வருவதும் வழக்கம்.

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி அருகே க.மாமானந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் பாபு (வயது 40) இவரது மனைவி அபிமாபீ (28) பி.எஸ்.சி. பட்டதாரியான இவர் கள்ளக்குறிச்சி அண்ணா நகர் பகுதியில் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு முகமது ராஷீத் (10) என்ற மகனும், ஆலியா (8) என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் பாபு தினமும் தனது மனைவியை மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்று அண்ணா நகரில் உள்ள பள்ளியில் விடுவதும், மீண்டும் மாலையில் அழைத்து வருவதும் வழக்கம். 

அதன்படி நேற்று முன்தினம் மாலை தனியார் பள்ளிக்கு சென்று மனைவியை அழைத்துவர மோட்டார் சைக்கிளில் காத்திருந்தார். ஆனால் மனைவி வெகுநேரம் ஆகியும் வரவில்லை. பள்ளியில் சக ஆசிரியர்கள் மற்றும் உறவினர்கள், அக்கம், பக்கத்தில் விசாரித்ததில் மனைவி காணவில்லை. இதுகுறித்து பாபு கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார் அதன்படி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News