உள்ளூர் செய்திகள்

ஓசூர் அருகே சிறுமியை கடத்திய வாலிபர்

Published On 2022-07-26 15:23 IST   |   Update On 2022-07-26 15:23:00 IST
  • கடந்த 24- ந்தேதி வீட்டில் இருந்த சிறுமி திடீரென மாயமானார்.
  • டிரைவர் ராஜா (வயது 28) என்பவர் கடத்தி சென்றிருக்கலாம் என பெண்ணின் தாயார் புகார் கொடுத்தார்.

 கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அருகேயுள்ள ஓ.காரப்பள்ளி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி. இவர் கடந்த 24- ந்தேதி வீட்டில் இருந்த சிறுமி திடீரென மாயமானார்.

இதனால் அவரை உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இது குறித்து தாய் சரஸ்வதி ஓசூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார்.

அந்த புகாரில் தனது மகளை பெட்டகரப்பள்ளி பகுதியை சேர்ந்த டிரைவர் ராஜா (வயது 28) என்பவர் கடத்தி சென்றிருக்கலாம் என இருந்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News