உள்ளூர் செய்திகள்

ஓசூர் அருகே ஏரியில் மூழ்கி சிறுவன் பலி

Published On 2022-07-25 14:57 IST   |   Update On 2022-07-25 14:57:00 IST
  • தனது நண்பர்களுடன் அருகே உள்ள ஏரிக்கு குளிக்க சென்றான்.
  • நீரில் மூழ்கி கிரிஷ் பரிதாபமாக உயிரிழந்தான்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகேயுள்ள பாகலூர் கோட்டை தெருவை சேர்ந்தவர் சிவகுமார். இவரது மகன் கிரிஷ் (வயது11). அப்பகுதியில் உள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான்.

தனது நண்பர்களுடன் அருகே உள்ள ஏரிக்கு குளிக்க சென்ற கிரிஷ் எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தான்.

இது குறித்து பாகலூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News