உள்ளூர் செய்திகள்

கடலூர் அருகே கோவில் திருவிழாவில் 2 தரப்பினர் மோதல்

Published On 2022-08-07 07:51 GMT   |   Update On 2022-08-07 07:51 GMT
  • கடலூர் அருகே கோவில் திருவிழாவில் 2 தரப்பினர் மோதிக்கொண்டனர்.
  • மோதலில் காயமடைந்த சரண்யா, கிஷோர் குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

கடலூர்:

கடலூர் அருகே பெத்தநாயக்கன்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சரண்யா (வயது 23). இந்த நிலையில் அதே பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் சம்பவத்தன்று மஞ்சள் விரட்டு விழா முன்னிட்டு சாமி ஊர்வலம் சென்றது. அப்போது சாமிஊர்வலத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மக்களிடம் சாமியுடன் வந்த சிலர் ஓரமாக செல்லும்படி தெரிவித்தனர்.

அப்போது திடீரென்று சரண்யாவுக்கும் அந்த நபர்களுக்கும் வாய் தகராறு ஏற்பட்டது.இதில் சரண்யாவை 3 பேர் திடீரென்று கல்லால் தாக்கி கொலை மிரட்டல் கொடுத்ததாக கூறப்படுகிறது‌. மேலும் இந்த தகராறில் கிஷோரையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த சரண்யா, கிஷோர் குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

இது குறித்து சரண்யா கொடுத்த புகாரின் பேரில் அதே பகுதியை சேர்ந்த கிஷோர், வீரமணி, வீரவேல், உள்ளிட்ட சிலர் மற்றும் கிஷோர் கொடுத்த புகாரின் பேரில் சைமன், ஜோசப், சச்சின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்‌.

Tags:    

Similar News