உள்ளூர் செய்திகள்
கடலூர் அருகே பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் கொலை மிரட்டல் 4 பேர் மீது வழக்கு
- ஏகாம்பரம் அதே பகுதியை சேர்ந்த முகுந்தன் என்பவரிடம் ரூ.10 லட்சம் வாங்கியுள்ளார்.
- ஏகாம்பரம் கொடுத்த புகாரின் பேரில் முகுந்தன், புருஷோத்தமன் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
கடலூரை அடுத்த முதுநகரை சேர்ந்தவர் ஏகாம்பரம் (வயது 48). இவர் அதே பகுதியை சேர்ந்த முகுந்தன் என்பவரிடம் ரூ.10 லட்சம் வாங்கியுள்ளார். இதில் ரூ.8 லட்சத்தை திருப்பி செலுத்திவிட்டார். மீதமுள்ள தொகையை ஏகாம்பரம் கொடுக்கவில்லை. இதையடுத்து ஏகாம்பதிடம் முகுந்தன் பணம் கேட்டார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் முகுந்தன் மற்றும் அவர்களுடன் இருந்த 3 பேர் ஏகாம்பரத்தை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து ஏகாம்பரம் கொடுத்த புகாரின் பேரில் முகுந்தன், புருஷோத்தமன் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.