search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Money disputes"

    • வரக்கால்பட்டு சேர்ந்த சங்கர் என்பவர் வைக்கோல் வாங்கி உள்ளார்.
    • சங்கர் மற்றும் மூன்று நபர்கள் செல்வத்தை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

    கடலூர்: 

    கடலூர் அருகே வெள்ளகேட் பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது 31). இவர் வைக்கோல் வியாபாரம் செய்து வருகின்றார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரக்கால்பட்டு சேர்ந்த சங்கர் என்பவர் வைக்கோல் வாங்கி உள்ளார். அப்போது முன்பணமாக 4000 கொடுத்துவிட்டு மீதி பணம் தருவதாக கூறியுள்ளார். மீதி பணம் தராததால் செல்வம் சம்பவத்தன்று சங்கரிடம் பணத்தை கேட்டார்.

    அப்பொழுது சங்கர் மற்றும் மூன்று நபர்கள் செல்வத்தை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் காயமடைந்த செல்வம் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து செல்வம் கொடுத்த புகாரின் பேரில் நெல்லிக்குப்பம் போலீசார் சங்கர் பிரபு புண்ணியமூர்த்தி ஆகிய மூன்று பேரும் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஏகாம்பரம் அதே பகுதியை சேர்ந்த முகுந்தன் என்பவரிடம் ரூ.10 லட்சம் வாங்கியுள்ளார்.
    • ஏகாம்பரம் கொடுத்த புகாரின் பேரில் முகுந்தன், புருஷோத்தமன் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூரை அடுத்த முதுநகரை சேர்ந்தவர் ஏகாம்பரம் (வயது 48). இவர் அதே பகுதியை சேர்ந்த முகுந்தன் என்பவரிடம் ரூ.10 லட்சம் வாங்கியுள்ளார். இதில் ரூ.8 லட்சத்தை திருப்பி செலுத்திவிட்டார். மீதமுள்ள தொகையை ஏகாம்பரம் கொடுக்கவில்லை. இதையடுத்து ஏகாம்பதிடம் முகுந்தன் பணம் கேட்டார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் முகுந்தன் மற்றும் அவர்களுடன் இருந்த 3 பேர் ஏகாம்பரத்தை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து ஏகாம்பரம் கொடுத்த புகாரின் பேரில் முகுந்தன், புருஷோத்தமன் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×