search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூர் அருகே  வாலிபரை தாக்கிய 3 பேர் மீது வழக்கு
    X

    கடலூர் அருகே வாலிபரை தாக்கிய 3 பேர் மீது வழக்கு

    • வரக்கால்பட்டு சேர்ந்த சங்கர் என்பவர் வைக்கோல் வாங்கி உள்ளார்.
    • சங்கர் மற்றும் மூன்று நபர்கள் செல்வத்தை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

    கடலூர்:

    கடலூர் அருகே வெள்ளகேட் பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது 31). இவர் வைக்கோல் வியாபாரம் செய்து வருகின்றார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரக்கால்பட்டு சேர்ந்த சங்கர் என்பவர் வைக்கோல் வாங்கி உள்ளார். அப்போது முன்பணமாக 4000 கொடுத்துவிட்டு மீதி பணம் தருவதாக கூறியுள்ளார். மீதி பணம் தராததால் செல்வம் சம்பவத்தன்று சங்கரிடம் பணத்தை கேட்டார்.

    அப்பொழுது சங்கர் மற்றும் மூன்று நபர்கள் செல்வத்தை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் காயமடைந்த செல்வம் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து செல்வம் கொடுத்த புகாரின் பேரில் நெல்லிக்குப்பம் போலீசார் சங்கர் பிரபு புண்ணியமூர்த்தி ஆகிய மூன்று பேரும் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×