உள்ளூர் செய்திகள்

சிறப்பு திருப்பலி நடைபெற்ற காட்சி.

நாசரேத்-மாதாவனம் புனித ஆரோக்கிய அன்னை வேளாங்கண்ணி ஆலயத்திருவிழா

Published On 2022-09-03 08:48 GMT   |   Update On 2022-09-03 08:48 GMT
  • நாசரேத்-பிரகாசபுரம் பங்கிற்குட்பட்ட மாதாவனம் புனித ஆரோக்கிய அன்னை வேளாங்கண்ணி ஆலயத்திருவிழா கடந்த 30-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
  • திருவிழாவின் 2-ம் நாள் முதல் 8-ம் நாள் வரை தினமும் மாலை 6 மணி ஜெபமாலை, திருப்பலி நடைபெறுகிறது.

நாசரேத்:

நாசரேத்-பிரகாசபுரம் பங்கிற்குட்பட்ட மாதாவனம் புனித ஆரோக்கிய அன்னை வேளாங்கண்ணி ஆலயத்திருவிழா கடந்த 30-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

முதல் நாளன்று ஜெபமாலை, கொடியேற்றம், திருப்பலி, மறையுரை நடைபெற்றது. தைலாபுரம் பங்குத்தந்தை இருதயராஜா, சோமநாதபேரி பங்குத்தந்தை ஜெகதீஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

திருவிழாவின் 2-ம் நாள் முதல் 8-ம் நாள் வரை தினமும் மாலை 6 மணி ஜெபமாலை, திருப்பலி நடைபெறுகிறது.

திருவிழா 9-ம் நாளன்று ஜெபமாலை, திருவிழா ஆரா தனை தூத்துக்குடி அருள்வளன் ஆயர் இல்லத்தந்தை ரூபர்ட் தலைமையில் நடைபெறுகிறது. மறையுரையை அருட்திரு ஜேம்ஸ் விக்டர் ஆற்றுகிறார். சிறப்பு நிகழ்வாக சமபந்தி விருந்து நடைபெறுகிறது.

8-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 6 மணிக்கு 10-ம் நாள் திருவிழா திருப்பலி மன்னார்புரம் பங்குத்தந்தை எட்வர்ட் தலைமையில் நடைபெறுகிறது.

தூத்துக்குடி ஆயர் இல்ல அருட்தந்தை இசிதோர் மறையுரை ஆற்றுகிறார். மாலை 6 மணிக்கு அன்னையின் தேர்ப்பவனியும், நற்கருணை ஆசீரும், இரவு 8 மணிக்கு கொடியிறக்கமும் நடைபெறுகிறது.

திருவிழாவிற்கான ஏற்பாடுகளை பிரகாசபுரம் பங்குத்தந்தை சலேட் ஜெரால்ட் தலைமையில் நாசரேத்-மாதாவனம் இறைமக்கள் செய்துள்ளனர்.

Tags:    

Similar News