உள்ளூர் செய்திகள்

போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

தேசிய ஒற்றுமை தின நிகழ்ச்சி

Published On 2023-11-01 09:37 GMT   |   Update On 2023-11-01 09:37 GMT
  • ஒற்றுமை தின ஓட்டம் நடைபெற்றது.
  • முடிவில் பயிற்றுனர் ஜெயக்கொடி நன்றி கூறினார்.

திருத்துறைப்பூண்டி:

இந்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் திருவாரூர் மக்கள் கல்வி நிறுவனம் சார்பில் தேசிய ஒற்றுமை தினம் மற்றும் தூய்மையே சேவை நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மக்கள் கல்வி நிறுவன இயக்குனர் பாலகணேஷ் தலைமை தாங்கினார்.

ஸ்கார்டு செயலாளர் பாபுராஜன் முன்னிலை வகித்தார்.

தேசிய ஒற்றுமை தினத்தில் நாம் அனைவரும் விருப்பு வெறுப்புகளை கடந்து முன்னேற்ற பாதையில் செல்லவும், தேசத்தின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பை காக்க வேண்டும் என உறுதிமொழி எடுக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

பின்னர், ஒற்றுமை தின ஓட்டம் நடைபெற்றது.

முன்னதாக மக்கள் கல்வி நிறுவன பயிற்றுநர் சத்தியகலா அனைவரையும் வரவேற்றார்.

முடிவில் பயிற்றுனர் ஜெயக்கொடி நன்றி கூறினார்.

நிகழ்ச்சியில் உதவி திட்ட அலுவலர் கனகதுர்கா, பயிற்றுனர்கள், பயனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News