நாங்குநேரி அருகே கஞ்சா கடத்திய வாலிபர் கைது
- நாங்குநேரி சப்-இன்ஸ்பெக்டர் கணபதி மற்றும் போலீசார் பட்டர்புரம் விலக்கு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
- அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் போலீசாரை பார்த்ததும் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு, தப்பி ஓடினர்.
களக்காடு:
நாங்குநேரி சப்-இன்ஸ்பெக்டர் கணபதி மற்றும் போலீசார் பட்டர்புரம் விலக்கு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் போலீசாரை பார்த்ததும் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு, தப்பி ஓடினர். போலீசார் விரட்டி சென்று ஒருவரை மடக்கி பிடித்தனர். அவரிடம் நாங்குநேரி டி.எஸ்.பி. ராஜூ, இன்ஸ்பெக்டர் ஆதம் அலி விசாரணை நடத்தினர்.
இதில் அவர் தெற்கு வள்ளியூர் அருகே உள்ள மேல கடம்பன்குளத்தை சேர்ந்த முத்துராஜ் மகன் பாலசூர்யா (வயது 20) என்பதும், தப்பி ஓடியது நாங்குநேரி அருகே மஞ்சங்குளத்தை சேர்ந்த ஆறுமுகம் என்ற செல்லையா மகன் அருள்நம்பி (23) என்பதும், இருவரும் மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து பாலசூர்யாவை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 1.400 கிராம் எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய அருள்நம்பியை தேடி வருகின்றனர்.