உள்ளூர் செய்திகள்

திருஞானசம்பந்தர் மடாலயத்தில் திருட்டு

Published On 2023-07-28 12:50 IST   |   Update On 2023-07-28 12:50:00 IST
  • பரமத்திவேலூர் பேட்டையில் திருஞானசம்பந்தர் மடாலயம் உள்ளது. இந்த மடாலயத்தில் சம்பவத்தன்று இரவு சிவனடியார்கள் இரவு தூங்கிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
  • 20-க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் சேர்கள், ஆன்மீக சொற்பொழிவு நிகழ்த்துவதற்காக வைக்கப்பட்டிருந்த ஆம்ளிபார், மைக் மற்றும் உபகரணங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

பரமத்திவேலூர் பேட்டையில் திருஞானசம்பந்தர் மடாலயம் உள்ளது. இந்த மடாலயத்தில் சம்பவத்தன்று இரவு சிவனடியார்கள் இரவு தூங்கிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. சிவனடியார்கள் காலையில் எழுந்து பார்த்தபோது அங்கிருந்த 20-க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் சேர்கள், ஆன்மீக சொற்பொழிவு நிகழ்த்துவதற்காக வைக்கப்பட்டிருந்த ஆம்ளிபார், மைக் மற்றும் உபகரணங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து பரமத்தி வேலூர் போலீசில் புகார் செய்தனர். இவரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News