உள்ளூர் செய்திகள்

பரமத்தி வட்டாரத்தில் விவசாயிகளுக்கு கரும்பு சாகுபடி பயிற்சி முகாம்

Published On 2023-08-21 08:02 GMT   |   Update On 2023-08-21 08:02 GMT
  • பரமத்தி வட்டாரத்தில் விவசாயிகளுக்கு நீடித்த நிலையான கரும்பு சாகுபடி குறித்த பயிற்சி முகாம் வழங்கப்பட்டது.
  • ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள் மற்றும் மத்திய, மாநில அரசு மூலம் வழங்கப்படும் மானிய விவரங்கள் பற்றி எடுத்துக்கூறப்பட்டது.

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி வட்டாரத்தில் விவசாயிகளுக்கு நீடித்த நிலையான கரும்பு சாகுபடி குறித்த பயிற்சி முகாம் வழங்கப்பட்டது. இப்பயிற்சியில் கரும்பு பயிரில் ஒரு பரு கரணை நாற்று உற்பத்தி தொழில்நுட்பம், சொட்டு நீர் பாசனம் அமைத்தல், ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள் மற்றும் மத்திய, மாநில அரசு மூலம் வழங்கப்படும் மானிய விவரங்கள் பற்றி எடுத்துக்கூறப்பட்டது. இப்பயிற்சியில் பொன்னி சர்க்கரை ஆலை கரும்பு மேலாளர் பழனிச்சாமி, கரும்பு ஆய்வாளர்கள் அல்லிமுத்து மற்றும் மயில்சாமி ஆகியோர் கலந்து கொண்டு தொழில்நுட்ப உரை வழங்கினார்கள். இதில் 40 விவசாயிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளர் பன்னீர்செல்வம், உதவி தொழில்நுட்ப மேலாளர் ரவினா மற்றும் உதவி வேளாண்மை அலுவலர் கவுசல்யா ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News