ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க கோரிக்கை
- அரசு ரேசன் கடை பணியாளர்கள் சங்கத்தின், மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நாமக்கல்லில் நடைபெற்றது.
- மாவட்டத் தலைவர் தண்டபாணி தலைமை வகித்தார்.
நாமக்கல்:
தமிழ்நாடு அரசு ரேசன் கடை பணியாளர்கள் சங்கத்தின், மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நாமக்கல்லில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் தண்டபாணி தலைமை வகித்தார். செயலாளர் சரவணன் வரவேற்றார். துணைத் தலைவர் பாஸ்கரன், நிர்வாகிகள் நடராஜன், அமுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், பொது வினியோகத்திட்டத்துக்கு தனித்துறை உருவாக்க வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும், சரியான எடையில் பொட் டலமாக வழங்க வேண்டும். சரியான எடையில் வழங் காமல், ஆய்வு செய்வதை தவிர்க்க வேண்டும். மகளிர், மகளிர் சுயஉதவிக் குழு ரேசன் கடைகளை அரசே ஏற்று நடத்தி, அப்பணியா ளர்களுக்கு, முறையான சம்பளம் வழங்க வேண்டும்.
தமிழகத்தில் ரேசன் அரிசி கடத்தல் தொடர்ந்து நடந்து வருகிறது. இதை தடுப்பதற்கு அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரேசன் அரிசி எவ்வாறு கடத்தப்படுகிறது என்பதை அறிய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.