உள்ளூர் செய்திகள்

இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை; தொழிலாளி கைது

Published On 2023-07-31 12:11 IST   |   Update On 2023-07-31 12:11:00 IST
  • சாமிநாதன் (50). கூலித்தொழிலாளி. இவர் 27 வயது இளம்பெண்ணுக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
  • அவரை கைது செய்து விசாரணை நடத்தினார்.

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா வாழவந்தி அருகே மேலப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சாமிநாதன் (50). கூலித்தொழிலாளி. இவர் 27 வயது இளம்பெண்ணுக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அந்த இளம் பெண் பரமத்தி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ரவி, சாமிநாதன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தினார். பின்னர் பரமத்தி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சாமிநாதனை ஜெயிலில் அடைத்தார்.

Tags:    

Similar News