உள்ளூர் செய்திகள்

பரமத்திவேலூர் அருகே ராஜா வாய்க்காலில் தவறி விழுந்த கூலி தொழிலாளி பிணமாக மீட்பு

Published On 2023-05-29 09:08 GMT   |   Update On 2023-05-29 09:08 GMT
  • கடந்த 24-ந் தேதி காலை வெற்றிலை கொடிக்காலுக்கு வேலைக்கு சென்றார். அதன்பின்னர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
  • ராஜா வாய்க்காலில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று மிதப்ப தாக பரமத்திவேலூர் போலீ சாருக்கு தகவல் கிடைத்தது.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா குப்புச்சிபாளையத்தைச் சேர்ந்தவர் நல்லாட்சி (வயது 74), கூலித் தொழிலாளி. இவர் கடந்த 24-ந் தேதி காலை வெற்றிலை கொடிக்காலுக்கு வேலைக்கு சென்றார். அதன்பின்னர் மீண்டும் வீடு திரும்பவில்லை. காணாமல் போன நல்லாட்சியை அவரது மகன்கள் செந்தில்குமார், பார்த்திபன் ஆகியோர் உறவினர் வீடுகள் மற்றும் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று பரமத்திவேலூரில் இருந்து நன்செய் இடையாறு செல்லும் வழியில் உள்ள வாஞ்சி பிள்ளையார் கோவில் அருகே உள்ள ராஜா வாய்க்காலில் அடை யாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று மிதப்ப தாக பரமத்திவேலூர் போலீ சாருக்கு தகவல் கிடைத்தது.

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் ராஜா வாய்க்காலில் மிதந்த ஆண் பிணத்தை மீட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் பிணமாக கிடந்தவர் அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி நல்லாட்சி என்பது தெரிய வந்தது.

கூலி வேலைக்கு சென்ற நல்லாட்சி, வீட்டிற்கு திரும்பு கையில் ராஜா வாய்க்கால் கரையில் நடந்து சென்றார். அப்போது வாய்க்கால் கரையோரத்தில் கீழே விழுந்து கிடந்த தேங்காயை எடுக்க முயன்ற போது, திடீ ரென எதிர்பாராத விதமாக மயங்கி ராஜா வாய்க்காலில் விழுந்துள்ளார். இதில் மேலே வரமுடியாமல் தத்தளித்த நல்லாட்சி, தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்தது.

இதனையடுத்து அவரது உடலை பிரேத பரிசோ தனைக்காக பரமத்திவேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தபோலீசார், சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News