உள்ளூர் செய்திகள்

லாரி புரோக்கர் சாவு

Published On 2023-07-24 12:29 IST   |   Update On 2023-07-24 12:29:00 IST
  • நாமக்கல், கருப்பட்டிபாளையம் சாலை, கலைவாணர் நகரில் வசிப்பவர் சுரேஷ்குமார் லாரி புரோக்கர்.
  • சம்பவ இடத்திற்கு வந்த சப்-இன்ஸ்பெக்டர் சாந்தி வீட்டு பூட்டை உடைத்து பார்த்த போது சுரேஷ்குமார் இறந்தநிலையில் கிடந்துள்ளார்.

நாமக்கல்:

நாமக்கல், கருப்பட்டிபாளையம் சாலை, கலைவாணர் நகரில் வசிப்பவர் சுரேஷ்குமார் (52) . லாரி புரோக்கர். இவரது மனைவி மலர்கொடி, இவர்களுக்கு ஒரு மகள், மகன் உள்ளன. மகள் திருமணம் ஆனநிலையில் மகன் வெளியூரில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் மனைவி மலர்கொடி, மகன் கவின்குமார் வெளியூர் சென்று வீடு திரும்பிஉள்ளனர். அப்போது வீடு உள்ளே பூட்டி இருந்தது. இதனையடுத்து நாமக்கல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த சப்-இன்ஸ்பெக்டர் சாந்தி வீட்டு பூட்டை உடைத்து பார்த்த போது சுரேஷ்குமார் இறந்தநிலையில் கிடந்துள்ளார். இதனையடுத்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Tags:    

Similar News