உள்ளூர் செய்திகள்

பிரதம மந்திரி கிசான் திட்டத்தில் விவசாயிகள்ஆதார் எண்ணை பதிவு செய்ய கபிலர்மலையில் சிறப்பு முகாம்

Published On 2023-06-04 08:24 GMT   |   Update On 2023-06-04 08:24 GMT
  • பிரதம மந்திரி கிசான் சம்மான் யோஜனா திட்டம் மூலம் 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2 ஆயிரம் விவசாய நிதி உதவித்தொகை விவ சாயிகளுக்கு வங்கிக்க ணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.
  • மத்திய அரசு வரும் ஜூலை மாதத்தில் 14-வது தவணை நிதியை விவசாயிகள் பெறுவதற்கு ஒரு அறிவிப்பை வெளி யிட்டுள்ளது.

பரமத்திவேலூர்:

கபிலர்மலை வட்டார வேளாண்மை உதவி இயக்கு னர் ராதாமணி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

பிரதம மந்திரி கிசான் சம்மான் யோஜனா திட்டம் மூலம் 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2 ஆயிரம் விவசாய நிதி உதவித்தொகை விவ சாயிகளுக்கு வங்கிக்க ணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசு வரும் ஜூலை மாதத்தில் 14-வது தவணை நிதியை விவசாயிகள் பெறுவதற்கு ஒரு அறிவிப்பை வெளி யிட்டுள்ளது.

அதன்படி, இதுவரை தங்களுடைய சரியான ஆதார் எண்ணை இணைக்காத, ஆதார் விடுபட்டுப்போன பிரதம மந்திரி கிசான் திட்ட விவசாயிகள் வருகிற 6-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை கபிலர்மலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவ லகத்தில் தபால்துறை அலுவலர்களால் நடத்தப்ப டும் சிறப்பு முகாமிற்கு விவசாயிகள் தங்கள் ஆதார் அட்டை, ஆதார் அட்டை யுடன் இணைக்கப்பட்ட செல்போன், முகவரி மாற்றம் இருப்பின் அதற்கான சான்று ஆகிய வற்றுடன் நேரில் வந்து விவசாயிகள் தங்களது விபரங்களை சரி பார்த்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படு கிறது. இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News