உள்ளூர் செய்திகள்

கைதான ரகுபதிராஜவையும், பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்களையும் படத்தில் காணலாம்.

கீரம்பூர் டாஸ்மாக் கடை அருகே முறைகேடாக மதுவிற்ற வாலிபர் கைது

Published On 2023-06-19 09:13 GMT   |   Update On 2023-06-19 09:13 GMT
  • அரசு டாஸ்மாக் கடை அருகே அனு மதியின்றி மது விற்பனை நடப்பதாக பரமத்தி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
  • தகவலின் அடிப்படையில் போலீஸ் சப்- இன்ஸ்பெக் டர் சுப்ரமணியன் தலைமை யிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தனர்.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம், கீரம்பூர் அரசு டாஸ்மாக் கடை அருகே அனு மதியின்றி மது விற்பனை நடப்பதாக பரமத்தி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தனர். அப்போது அங்கு திருட்டுத்தனமாக மது பாட்டில்களை விற்பனை செய்த சிவகங்கை மாவட்டம், அங்காளக் கோட்டையை சேர்ந்த சின்னசாமி என்பவரது மகன் ரகுபதிராஜா(25) என்பவரை கைது செய்தனர். மேலும் அனுமதியின்றி விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 25 மதுபாட்டில்களை பரமத்தி போலீசார் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News