நாமகிரிப்பேட்டையில் 1350 மஞ்சள் மூட்டைகள் ரூ.56 லட்சத்திற்கு ஏலம்
- நாமகிரிப்பேட்டையில் ராசிபுரம் ஆர்.சி.எம்.எஸ் சங்கத்தின் கிளை வளாகத்தில் நேற்று மஞ்சள் ஏலம் நடந்தது.
- இந்த ஏலத்தில் 1350 மஞ்சள் மூட்டைகள் ரூ.56 லட்சத்திற்கு விற்பனை ஆனது.
ராசிபுரம்:
ராசிபுரம் அருகே உள்ள நாமகிரிப்பேட்டையில் ராசிபுரம் ஆர்.சி.எம்.எஸ் சங்கத்தின் கிளை வளாகத்தில் நேற்று மஞ்சள் ஏலம் நடந்தது.
இதில் நாமகிரிப் பேட்டை, அரியாக் கவுண்டம்பட்டி, ஒருவன்குறிச்சி, தொப்பபட்டி, புதுப்பட்டி, நாமகிரிப்பேட்டை, மெட்டாலா, முள்ளுக்குறிச்சி, பேளுக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் மஞ்சளை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.
அதேபோல் ஒடுவன் குறிச்சி, நாமகிரிப்பேட்டை, ஈரோடு, சேலம், ஆத்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து மஞ்சளை ஏலம் எடுத்தனர்.
இந்த ஏலத்தில் 1350 மஞ்சள் மூட்டைகள் ரூ.56 லட்சத்திற்கு விற்பனை ஆனது. இதில் விரலி ரகம் 1000 மூட்டைகளும், உருண்டை ரகம் 300 மூட்டைகளும், பனங்காலி ரகம் 50 மூட்டைகளும் கொண்டு வரப்பட்டிருந்தன.
விரலி ரகம் குறைந்தபட்சம் ஒரு குவிண்டால் ரூ.5,689-க்கும், அதிகப்பட்சமாக ரூ.7,939-க்கும், உருண்டை ரகம் குறைந்தபட்சம் ஒரு குவிண்டால் ரூ.2,689-க்கும், அதிகபட்சமாக ரூ.6,609-க்கும், பனங்காலி ரகம் குறைந்த பட்சம் ஒரு குவிண்டால் ரூ.10,102-க்கும், அதிகபட்சமாக ரூ.14,022-க்கும் ஏலம் விடப்பட்டது.