உள்ளூர் செய்திகள்

களக்காடு மலையடிவாரத்தில் வனவிலங்குகள் நடமாட்டம்-வனத்துறை எச்சரிக்கை

Published On 2022-07-22 09:33 GMT   |   Update On 2022-07-22 09:33 GMT
  • விவசாயிகள் யாரும் விளைநிலங்களுக்கு இரவு நேரங்களில் தனியாக செல்வதையோ, அங்கு படுத்து உறங்குவதையோ முற்றிலும் தவிர்க்குமாறு வனத்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
  • வனவிங்குகளின் நடமாட்டத்தை கண்காணிக்கவும், திருப்பி காட்டிற்குள் அனுப்புவதற்காகவும் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

களக்காடு:

களக்காடு புலிகள் காப்பக வனத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது:-

களக்காடு புலிகள் காப்பக மலையடிவார பகுதிகளில் தற்போது பனம் பழம், வாழைப்பழம், சப்போட்டா மற்றும் கொல்லம் பழம் (முந்திரி) ஆகிய பழங்கள் விளையும் பருவம் என்பதால் வனவிலங்குகளான கரடி, குரங்கு போன்றவைகள் காட்டைவிட்டு வெளியேறி விளைநிலங்களுக்குள் புகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

இதனால் விவசாயிகள் யாரும் விளைநிலங்களுக்கு இரவு நேரங்களில் தனியாக செல்வதையோ, அங்கு படுத்து உறங்குவதையோ முற்றிலும் தவிர்க்குமாறு வனத்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வனவிங்குகளின் நடமாட்டத்தை கண்காணிக்கவும், திருப்பி காட்டிற்குள் அனுப்புவதற்காகவும் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் விளைநிலங்களில் வன விலங்குகளை பார்த்தால் உடனடியாக 7598401438 (களக்காடு வனவர் செல்வ சிவா). 9171513119 (திருக்குறுங்குடி வனவர் ஜெபிந்தர் சிங் ஜாக்சன்) ஆகிய செல்போன் நம்பர்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வனத்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News