உள்ளூர் செய்திகள்
சின்னசேலம் அருகே மோட்டார் சைக்கிள் திருட்டு
போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன மோட்டார் சைக்கிளை தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்த அனுமந்தல் கிராமம் ராமன் மகன் பிச்சப்பிள்ளை (வயது 44) இவர் நைனார்பாளையத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் சாப்பிடுவதற்கு, கடை வாசலில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சென்றார். சாப்பிட்டு விட்டு வெளியே வந்து பார்த்தபோது, மோட்டார் சைக்கிலள இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து கீழ்குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன மோட்டார் சைக்கிளை தேடி வருகின்றனர்.