தூத்துக்குடியில் வ.உ.சிதம்பரனார் சிலைக்கு அமைச்சர் கீதாஜீவன் மாலை அணிவிப்பு
- வ.உ.சிதம்பரனார் பிறந்தநாள் அரசு விழாவாக தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
- விழாவில் மேயர் ஜெகன் பெரியசாமி உள்பட தி.மு.க.வினர் பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி:
சுதந்திர போராட்ட தியாகி வ.உ.சிதம்பரனார் பிறந்தநாள் அரசு விழாவாக தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. பழைய மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள அவரது சிலைக்கு வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
விழாவில் மேயர் ஜெகன் பெரியசாமி, தி.மு.க. மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், துணை மேயர் ஜெனிட்டா, மாவட்ட துணைச்செயலாளர் ஆறுமுகம், பொருளாளர் ரவீந்திரன், மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், கலைச்செல்வி, மாவட்ட அணி அமைப்பாளர்கள் மதியழகன், கவிதாதேவி, அன்பழகன், வக்கீல் குபேர் இளம்பரிதி, மரியதாஸ், வக்கீல் அசோக், பொதுக்குழு உறுப்பினர் கஸ்தூரிதங்கம், மாவட்ட துணைச்செயலாளர் பிரமிளா, மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் பிரதீப், அந்தோணி கண்ணன், பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார், ராமகிருஷ்ணன், சுரேஷ்குமார், மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், சக்திவேல், செல்வக்குமார், மாநகர அணி அமைப்பாளர்கள் முருகஇசக்கி, ஜெயக்கனி, துணை அமைப்பாளர்கள் கிறிஸ்டோபர், விஜயராஜ், மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், வட்டச்செயலாளர்கள் கதிரேசன், சதீஷ்குமார், கீதா செல்வமாரியப்பன், கங்கா ராஜேஷ், முத்துராஜா, பொன்ராஜ், கவுன்சிலர்கள் சரவணக்குமார், விஜயகுமார், பொன்னப்பன், இசக்கிராஜா, ஜெயசீலி, தெய்வேந்திரன், அந்தோணி, பிரகாஷ், மார்ஷல், ஜான்சிராணி, ராமுத்தம்மாள், கந்தசாமி, பகுதி இளைஞர் அணி அமைப்பாளர் சூர்யா மற்றும் கருணா, பிரபாகர், ஜோஸ்பர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.