உள்ளூர் செய்திகள்

 மருத்துவ முகாம் நடந்த போது எடுத்தபடம்.

தட்சணமாற நாடார் சங்க கல்லூரியில் வளர் இளம் பருவத்தினருக்கான மருத்துவ முகாம்

Published On 2023-09-28 09:05 GMT   |   Update On 2023-09-28 09:05 GMT
  • தெற்கு கள்ளிகுளம் நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரியில் இளஞ்செஞ்சிலுவை சங்கம், நாட்டு நலப் பணி த்திட்டம் மற்றும் அகத்தர மதிப்பீட்டுக்குழு சார்பில் வளர் இளம் பருவத்தின ருக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
  • நெல்லை தட்சணமாற நாடார் சங்கம் கல்லூரி வரலாற்று துறை சார்பில் உலக சுற்றுலா தினம் கொண்டாடப்பட்டது.

வள்ளியூர்:

தெற்கு கள்ளிகுளம் நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரியில் இளஞ்செஞ்சிலுவை சங்கம், நாட்டு நலப் பணி த்திட்டம் மற்றும் அகத்தர மதிப்பீட்டுக்குழு சார்பில் வளர் இளம் பருவத்தின ருக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் ராஜன் முன்னிலை வகி த்தார். ஆர்.பி.எஸ்.கே. மருத்துவ அலுவலர் கடற்கரை குமார் தலைமை யிலான மருத்துவ குழுவி னர் கண், தோல் மற்றும் ரத்த சோகை உள்ளிட்ட பரிசோ தனை களை செய்தனர். ஏராள மான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். முகாமி ற்கான ஏற்பாடுகளை இளஞ்செஞ்சிலுவை சங்க அலுவலர்கள் பிருந்தா, கிரிஜா, நாட்டு நலப் பணித்திட்டம் அலுவலர்கள் ராஜராஜேஸ்வரி, ஹரி கிருஷ்ணன், அகத் தர மதிப்பீட்டுக்குழு ஒருங்கி ணைப்பாளர் புஷ்ப ராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.

சுற்றுலா தினம்

மேலும் நெல்லை தட்சணமாற நாடார் சங்கம் கல்லூரி வரலாற்று துறை சார்பில் உலக சுற்றுலா தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ராஜன் தலைமை தாங்கினார். வரலாற்று துறை தலைவர் பால சரஸ் வதி வரவேற்று பேசினார்.

நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரி வரலாற்று துறை பேராசிரியர் ராஜேஷ் கலந்து கொண்டு "மனித வாழ்வில் சுற்றுலாவின் தாக்கம்" என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை வரலாற்றுத்துறை தலைவர், பேராசிரியர்கள் மாணவ, மாணவிகள் செய்திருந்தனர். மாணவி சுபரிஷா நன்றி கூறினார்.

Tags:    

Similar News