உள்ளூர் செய்திகள்

ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம்

ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம்

Published On 2022-06-07 10:02 GMT   |   Update On 2022-06-07 10:02 GMT
  • அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கான எண்ணும், எழுத்தும் என்கிற பயிற்சி முகாம் தொடங்கியது.
  • மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 100 -க்கும் மேற்பட்ட ஆசிரிய -ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன் கோவிலில் அமைந்துள்ள அரசு பெண்கள் மேல்நிலை–ப்பள்ளியில் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கான எண்ணும், எழுத்தும் என்கிற பயிற்சி முகாம் தொடங்கியது.

குருக்கத்தி ஆசிரியர் பயிற்சி கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சார்பாக நடைபெற்ற இம்முகாமில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 100 -க்கும் மேற்பட்ட ஆசிரிய -ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

முதன்மைக் கல்வி அலுவலர் நேர்முக உதவியாளர் பரமசிவம், சீர்காழி மாவட்ட கல்வி அலுவலர் செல்வராஜ், வட்டார கல்வி அலுவலர் பூங்குழலி மற்றும் நாகராஜன் வளமைய ஜெயசங்கர் உள்ளிட்டோர் தலைமையில் நடைபெற்ற இம்முகாமில் கல்வித்துறை அதிகாரிகள் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் திரளான ஆசிரிய ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News