உள்ளூர் செய்திகள்

கருட சேவை நடைபெற்றது.

தங்க கருட சேவை

Published On 2022-06-08 10:27 GMT   |   Update On 2022-06-08 10:27 GMT
  • பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் விமர்சையாக தொடங்கி நடைபெற்று வருகிறது.
  • பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், சாத்துமுறை, புஷ்ப அலங்காரம் நடைபெற்றது.

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் 108 திவ்ய தேசங்களில் 28-வது திவ்ய தேசமான தாடாளன் பெருமாள் என்னும் திருவிக்ரம நாராயண பெருமாள் கோயில் உள்ளது.

மூலவர் பெருமாள் தனது இடது பாதத்தை வான் நோக்கி தூக்கி உலகளந்த பெருமாளாக காட்சி தருகிறார்.

பிரசித்தி பெற்ற இக்கோவிலில் வைகாசி மாத பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் விமர்சையாக தொடங்கி நடைபெற்று வருகிறது.

விழாவில் முக்கிய நிகழ்வாக தங்க கருட சேவை நடைபெற்றது. முன்னதாக பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், சாத்துமுறை, புஷ்ப அலங்காரம் நடைபெற்றது.

தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் தங்க கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி, தீபாராதனை நடந்தது.

பின்னர் பிரதான வீதிகளில் தங்க கருட வாகனத்தில் பெருமாள் வீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News