உள்ளூர் செய்திகள்

 காட்டு கூடலூரில்கொரானாவில் தாயை இழந்தபெண்ணுக்கு ஊரார் சேர்ந்து திருமணம்நடத்தினர்.

பண்ருட்டியில் கொரோனாவில் தாயை இழந்து பெண்ணுக்கு ஊரார் நடத்திய திருமணம்

Published On 2022-06-28 06:41 GMT   |   Update On 2022-06-28 06:41 GMT
  • பண்ருட்டியில் கொரோனாவில் தாயை இழந்து பெண்ணுக்கு ஊரார் திருமணம் நடத்தி வைத்தனர்.
  • தொழிலதிபர் பாக்கியராஜ் என்பவர் திருமணத்திற்கு தேவையான சீர்வரிசை பொருட்கள்வாங்க ஒரு லட்ச ரூபாய் கொடுத்து உதவினார்.

கடலூர்:

பண்ருட்டி அருகே காட்டுக் கூடலூரை சேர்ந்தவர் சங்கீதா, இவர்,கொரோனாவுக்கு தாயை இழந்தார். பின்னர் பாட்டி வளர்ப்பில்வளர்ந்து வந்த அந்த பெண்ணுக்கு திருமண ஏற்பாடு நடந்தது. வறுமை மற்றும்போதிய பணவசதி இல்லாததால் இவரது திருமணம் தள்ளிபோனது. அதே பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் ஆசிரியர் செந்தமிழ்செல்வன் ஊர்மக்கள் உதவியுடன் திருமணநடத்த ஏற்பாடு செய்தார்.

அதே பகுதியை சேர்ந்த தொழிலதி பர்பாக்கியராஜ் என்பவர் திருமணத்திற்கு தேவையான சீர்வரிசை பொருட்கள்வாங்க ஒரு லட்ச ரூபாய் கொடுத்து உதவினார். அருகில் இருந்தவர்களும் அவரவர் பங்குக்கு ஒவ்வொரு செலவை ஏற்றுக் கொண்டனர். நேற்று இவருக்கு உறவினர்களால் நிச்சயக்கப்பட்ட மாப்பிள்ளையுடன் அதே பகுதி உள்ள அரசியம்மன்கோவிலில் பாக்கியராஜ், புகழேந்தி மற்றும்ஊரார்மு ன்னிலையில் திருமணம் நடந்தது

Tags:    

Similar News