உள்ளூர் செய்திகள்

அரசு பஸ் டிரைவரை தாக்கியவர் கைது

Published On 2023-03-25 15:47 IST   |   Update On 2023-03-25 15:47:00 IST
  • யுகாதிபண்டிகை கொண்டாடத்தில் கலர்பொடியை பஸ் டிரைவர் மீதும் பேருந்திலும் கலர்பொடி பூசியுள்ளனர்.
  • 4பேரும் சேர்ந்து டிரைவரை கையால் தாக்கியுள்ளனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே உள்ள காமன்தொட்டி காவேரிநகர் பகுதியை சேர்ந்த ஜலபதி (வயது 49). இவர் அரசு பேருந்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் ஒசூர்- ராமன்தொட்டிக்கு பயணிகளை ஏற்றிகொண்டு காளிங்கவரம் அருகே செல்லும்போது அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் யுகாதிபண்டிகை கொண்டாடத்தில் கலர்பொடியை பஸ் டிரைவர் மீதும் பேருந்திலும் கலர்பொடி பூசியுள்ளனர்.

இதனைகேள்வி கேட்ட டிரைவரை ஆறுப்பள்ளி சண்முகம் (19), செம்பரசனப்பள்ளி ஆனந்த் (24), அருண்(20), காளிங்கவரம் மஞ்சு (19) ஆகிய 4பேரும் சேர்ந்து டிரைவரை கையால் தாக்கியுள்ளனர்.

இது குறித்து சூளகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து சண்முகத்தை கைது செய்தனர். மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News