உள்ளூர் செய்திகள்

ஓசூரில் உலக நன்மைக்காக மகா ருத்ர யாகம்

Published On 2022-12-03 15:27 IST   |   Update On 2022-12-03 15:27:00 IST
  • இலக்கியங்களில் இருந்து பக்தி சொற்பொழிவு நடைபெறுகிறது.
  • பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

ஓசூர்,

ஓசூர் - பஸ்தி சாலையில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில்,கடந்த 28-ஆம் தேதி தொடங்கி நாளை(ஞாயிற்றுக்கிழமை) வரை நாள்தோறும், திருமுறை விண்ணப்பம், ஸ்ரீ ராம நாம தாரக மந்திர ஜெபம், பஞ்சாட்ச மந்திர ஜெபம், அய்யப்ப சாமி பஜனைகள், ராமாயணம், மகாபாரதம், பாகவதம், நாராயணீயம் மற்றும் பகவத் கீதை உள்ளிட்ட பக்தி இலக்கியங்களில் இருந்து பக்தி சொற்பொழிவு நடைபெறுகிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று, உலக நன்மைக்காக மகா ருத்ர யாகம் நடைபெற்றது. அதிகாலையில் மகா கணபதி ஹோமத்துடன் தொடங்கிய யாகத்தில் 121 குருக்கள் பங்கேற்று, தொடர்ந்து 8 மணி நேரம் ருத்ர யாகத்தை நடத்தினர்

இந்த மகா ருத்ர யாகத்தில், 1,008 ருத்ர பாராயணம் வைபவமும் நடைபெற்றது. மேலும் விழாவையொட்டி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

உலக அமைதி மற்றும் நன்மை வேண்டியும் மக்கள் அனைவரும் நலமுடன் வாழ்வதற்காக வேண்டியும் இந்த மகா ருத்ர ஹோமம் நடத்தப்படுவதாகவும் தொடர்ந்து 18 ஆண்டுகள் நடைபெற்று, 19-வது ஆண்டாக இந்த ஆண்டும் மகா ருத்ர யாகம், சிறப்பாக நடைபெற்றதாகவும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News