உள்ளூர் செய்திகள்

குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

Published On 2023-10-02 07:06 GMT   |   Update On 2023-10-02 07:06 GMT
  • குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
  • விக்கிரமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன், காமாட்சி உள்பட போலீசார் மறியலில் ஈடு பட்ட பெண்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.

சோழவந்தான்

மதுரை மாவட்டம் சோழ வந்தான் அருகே உள்ள செல்லம்பட்டி ஒன்றியம் விக்கிரமங்கலம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கீழப்பட்டி கிராமத்தில் கடந்த சில மாதங்களாக குடிநீர் சரியாக கிடைக்க வில்லை.

இது குறித்து பல முறை ஊராட்சி மன்ற தலைவர் பூங்கொடி பாண்டியிடம் புகார் கொடுக்கப்பட்டது. இதன் பேரில் ஊராட்சி நிர் வாகம் சார்பில் அருகில் உள்ள கம்மாயில் போர் வெல் போட்டு குடிநீர் எடுக்க ஏற்பாடு செய்தனர்.

இதில் தனிநபர் ஒருவர் குடிநீர் எடுக்கக் கூடாது என்று தகராறு செய்ததாக வும் இதனால் இக்கிராமத் திற்கு குடிநீர் கிடைக்காமல் இப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் இன்று காலை கீழப்பட்டி அரசு பள்ளி மெயின் ரோட்டில் காலி குளத்துடன் பெண்கள் மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து விக்கிரமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் முருகே சன், காமாட்சி உள்பட போலீசார் மறியலில் ஈடு பட்ட பெண்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.

இதில் குடிநீர் பிரச் சினைக்கு தீர்வு காணப்படும் என்று தெரிவித்ததன் பேரில் மறியலில் ஈடுபட்ட பெண்கள் மற்றும் கிராம பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News