உள்ளூர் செய்திகள்

திருமணத்தை அமைச்சர் பி.மூர்த்தி நடத்தி வைத்தார்.

ஒன்றிய கவுன்சிலர் வசந்த கோகிலா-சி.பி.ஆர். சரவணன் இல்ல திருமணம்

Published On 2023-05-26 07:48 GMT   |   Update On 2023-05-26 07:48 GMT
  • திருவேடகத்தில் ஒன்றிய கவுன்சிலர் வசந்த கோகிலா- சி.பி.ஆர். சரவணன் இல்ல திருமணத்தை அமைச்சர் பி.மூர்த்தி நடத்தி வைத்தார்.
  • சத்ய பிரகாஷ் உள்ளிட்ட உற்றார், உறவினர்கள், நண்பர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

வாடிப்பட்டி

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தி.மு.க. கவுன்சிலர் வசந்த கோகிலா-சி.பி.ஆர்.சரவணன் மகன் எஸ்.வி.விஷ்ணு ராமிற்கும், மாரணி வாரியேந்தல் டி. ண்ணன்-தீபா மகள் வைஷ்ணவிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது.

இந்த திருமணம் சோழவந்தான் அருகே உள்ள திருவேடகம் சி.பி.ஆர். அருவுகம் மகாலில் நடந்தது. மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், அமைச்சருமான பி. மூர்த்தி தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைத்தார்.

விழாவிற்கு வடக்கு மாவட்ட துணைச்செயலாளர் வெங்கடேசன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். வாடிப்பட்டி பேரூராட்சி தலைவரும், பேரூர் செயலாளருமான பால்பாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் பால.ராஜேந்திரன், பசும்பொன் மாறன் ஆகியோர் வரவேற்றனர்.

ஆனையூர் பகுதி செயலாளர் மருதுபாண்டி, மாநில இளைஞரணி துணைச்செயலாளர் ஜி.பி.ராஜா, சோழவந்தான் ஒன்றிய கவுன்சிலர்-பேரூர் செயலாளர் எஸ்.என். சத்ய பிரகாஷ் உள்ளிட்ட உற்றார், உறவினர்கள், நண்பர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Tags:    

Similar News