உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்

போக்குவரத்து கழக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2023-06-06 08:53 GMT   |   Update On 2023-06-06 08:53 GMT
  • போக்குவரத்து கழக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
  • போக்குவரத்து கழக மண்டல அலுவலகம் முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

மதுரை

அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் டிரைவர் மற்றும் கண்டக்டர் களுக்கு வார விடுப்பு வழங்க வேண்டும், மண்ட லங்களுக்கு இடையே இடமாறுதல் செய்யும் அதிகாரம் அந்தந்த பொது மேலாளர்களுக்கே வழங்க வேண்டும், பழைய பேருந்து களை பராமரிப்பு செய்ய தேவையான தரமான உதிரி பாகங்கள் வழங்க வேண்டும், பணி நேரம் சட்ட விரோத மாக 12 மணி நேரமாக மாற்றப்பட்டதை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை அரசு போக்குவரத்து மண்டல அலுவலகம் முன்பாக இன்று ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தின் சார்பில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் மதுரை விருதுநகர், திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட போக்குவரத்து கழக பணியாளர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட் டத்தின் போது போக்கு வரத்துதுறை மற்றும் தமிழக அரசை கண்டித்தும், தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் கண்டன முழக்கங்களை எழுப்பினா். போக்குவரத்து பணியாளர்களின் போராட்டத்தை முன்னிட்டு போக்குவரத்து கழக மண்டல அலுவலகம் முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

Tags:    

Similar News