உள்ளூர் செய்திகள்
தொழிலதிபரிடம் ரூ.5 லட்சம் திருட்டு
- டீயில் போதை மருந்து கலந்து கொடுத்து தொழிலதிபரிடம் ரூ.5 லட்சம் திருடப்பட்டது.
- தனியார் ஊழியர் கைது செய்யப்பட்டார்.
மதுரை
மதுரை கோமதிபுரம் சன் ஸ்டார் தெருவை சேர்ந்தவர் சஞ்சய்குமார்(வயது56), தொழிலதிபர். இவர் திடீர்நகர் பகுதியில் பச்சை நாச்சியம்மன் தெருவில் நிறுவனம் நடத்தி வருகிறார்.
இவரிடம் ஊழியராக வேலை பார்த்து பார்ப்பவர் ஜிஜேந்தர்(34). இவர் சம்பவத்தன்று டீயில் போதை மருந்து கலந்து முதலாளி சஞ்சய்குமாரிடம் கொடுத்துள்ளார். டீயை குடித்ததும் சஞ்சய்குமார் மயங்கி விட்டார். அப்போது அவர் வைத்திருந்த ரூ.5 லட்சத்தை ஜிஜேந்தர் திருடி விட்டு தப்பிச்சென்று விட்டார்.
இதுபற்றி சஞ்சய்குமார் திடீர் நகர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொழிலதிபரிடம் இருந்து ரூ.5 லட்சத்தை திருடிச்சென்ற தனியார் ஊழியர் ஜிஜேந்தரை கைது செய்து அவர் திருடிய பணத்தை பறிமுதல் செய்தனர்.