தமிழ்நாடு செய்திகள்
பொதுப் போக்குவரத்தை மக்கள் அதிகம் பயன்படுத்த வேண்டும் - மு.க.ஸ்டாலின்
- சென்னையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது.
- மின்சார பேருந்துகளுக்கு நல்ல வரவேற்பு இருப்பதால், மேலும் 600 மின்சாரப் பேருந்துகளை பயன்பாட்டுக்கு கொண்டு வர உள்ளோம்.
சென்னையில் நடைபெறும் தமிழ்நாடு காலநிலை மாற்றத்திற்கான ஆட்சி மன்றக்குழு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* சென்னையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது.
* மக்கள் அதிகளவில் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துவதுதான் நெரிசலைக் குறைக்க சிறந்த வழி.
* பொது போக்குவரத்தை பயன்படுத்துவதை ஊக்குவிக்கதான் 120 மின்சாரப் பேருந்துகளை கொண்டு வந்துள்ளோம்.
* மின்சார பேருந்துகளுக்கு நல்ல வரவேற்பு இருப்பதால், மேலும் 600 மின்சாரப் பேருந்துகளை பயன்பாட்டுக்கு கொண்டு வர உள்ளோம். இதனால் நெரிசலும் மாசும் குறையும்.
இவ்வாறு அவர் கூறினார்.