உள்ளூர் செய்திகள்

அழுகிய நிலையில் கிடந்த முதியவர் உடல் மீட்பு

Published On 2023-05-15 08:01 GMT   |   Update On 2023-05-15 08:01 GMT
  • அழுகிய நிலையில் கிடந்த முதியவர் உடல் மீட்கப்பட்டது.
  • வீட்டுக்குள் இருந்து துர்நாற்றம் வீசியது.

மதுரை

மதுரை கிருஷ்ணாபுரம் காலனி பாரதிநகர் கோகுலம் கார்டனை சேர்ந்தவர் அப்துல் காதர் ஜெய்லானி (வயது73). இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். இவர் தனது 2-வது மனைவியுடன் வீட்டில் வசித்து வந்தார். அவர் கடந்த சில நாட்களாக தனியாக வீட்டில் இருந்துள்ளார்.

இந்த நிலையில் அவரது வீட்டுக்குள் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகமடைந்த பொதுமக்கள் தல்லாகுளம் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தனர். அப்போது அப்துல் காதர் ஜெய்லானி உடல் அழுகிய நிலையில் இருந்தது. அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது சாவில் மர்மம் உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News