உள்ளூர் செய்திகள்

தாய்க்கு உதவி செய்ய சென்ற மதுரை சிறுமி பாலியல் பலாத்காரம்

Published On 2022-08-11 10:20 GMT   |   Update On 2022-08-11 10:20 GMT
  • தாய்க்கு உதவி செய்ய சென்ற மதுரை சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்
  • போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

மதுரை

மதுரை யாகப்பா நகரைச் சேர்ந்த ஒரு பெண், தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீசில், ஒரு புகார் மனு கொடுத்து உள்ளார். அதில் எனக்கு கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு உள்ளது. இதற்காக காரைக்குடி, பள்ளத்தூரில் உள்ள உறவினர் ராஜபாண்டி என்பவரின் வீட்டில் தங்கி இருந்தேன். அப்போது என்னை பராமரிப்பதற்காக 14 வயது மகள் வந்திருந்தார்.

இந்த நிலையில் ராஜபாண்டி (வயது 40). இவர் பொய்யான வாக்குறுதிகளை கூறி, எனது மகளை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். இதன் காரணமாக என் மகள் இப்போது கர்ப்பமாக உள்ளார். எனவே போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதாதேவி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அப்போது சம்பவம் நடந்தது, காரைக்குடி பகுதி என்பதால் இந்த வழக்கை காரைக்குடிக்கு மாற்றுவது என்று போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

Tags:    

Similar News