உள்ளூர் செய்திகள்

இளம்பெண்கள் தற்கொலை

Published On 2023-11-04 08:04 GMT   |   Update On 2023-11-04 08:04 GMT
  • மதுரையில் இளம்பெண்கள் தற்கொலை செய்துகொண்டார்.
  • 10 ஆண்டுகள் தண்டனை பெற்று தற்போது சிறையில் இருந்து வருகிறார்.

மதுரை

மதுரை அண்ணாநகர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி கவிதா (வயது37). 10 ஆண்டுகளுக்கு முன்பு குடும்ப பிரச்சினையில் மகள் மீது கணவர் ஆசிட் ஊற்ற முயன்றுள்ளார். இது தொடர்பான வழக்கில் 10 ஆண்டுகள் தண்டனை பெற்று தற்போது சிறையில் இருந்து வருகிறார்.

இந்த நிலையில் கணவரை ஜாமீனில் கொண்டுவர கவிதா ப லமுறை முயற்சித்துள்ளார். ஆனால் கணவரை அவரால் ஜாமீனில் எடுக்க முடியவில்லை. இதனால் மன விரக்தியில் இருந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.உயிருக்கு போராடிய அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கவிதா பரிதாபமாக இறந்தார். இது குறித்து அண்ணா நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை ஆரப்பாளையம் கிராஸ் ரோடு கிருஷ்ணபாளையம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவரது மனைவி பிரியா (27). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கணவர் வீட்டில் பிரியா வசித்து வந்தார். இதனால் மன விரக்தியில் இருந்த அவர் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உறவினர்கள் அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே பிரியா இறந்தார். இது குறித்து கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News