உள்ளூர் செய்திகள்

சோழவந்தானில் சனிப்பெயர்ச்சி விழா

Published On 2023-01-18 08:27 GMT   |   Update On 2023-01-18 08:27 GMT
  • சோழவந்தானில் சனிப்பெயர்ச்சி விழா நடந்தது.
  • சுயம்பு சனீஷ்வரருக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட திரவ அபிஷேகம் நடந்தது.

சோழவந்தான்

சோழவந்தான் வைகையாற்றின் கிழக்கு கரையில் அமைந்து விசாக நட்சத்திர தலமாக விளங்கி வரும் சனீஷ்வரர் கோவிலில் திருகணித பஞ்சாங்கபடியான வக்கிர நிவர்த்தி விழா நடந்தது. சனிபகவான் மகர ராசியில் இருந்து கும்பராசிக்கு நேற்று மாலை 6.45. மணியளவில் பெயர்ச்சி ஆனார். இந்த நிகழ்வையொட்டி அர்ச்சகர் ராமசுப்பிரமணி தலைமையில் யாகவேள்வி தொடங்கியது. பின்னர் மாவலிங்கம் தலவிருட்சமாக உள்ள மூலவர் சுயம்பு சனீஷ்வரருக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட திரவ அபிஷேகம் நடந்தது. பக்தர்களின் பெயர் ராசிக்கு பரிகாரம் செய்து எள் தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர். இந்த வக்கிர பெயர்ச்சியையொட்டி கடகம், சிம்மம், விருச்சிகம், மகரம், கும்பம் ஆகிய ராசிக்காரர்கள் பரிகாரம் செய்ய வேண்டியவர்கள் ஆவார்கள். இதில் செயல் அலுவலர் இளமதி, கணக்கர் பூபதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News