உள்ளூர் செய்திகள்

விக்னேஷ்

ரெயில்வே ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2022-08-07 08:03 GMT   |   Update On 2022-08-07 08:03 GMT
  • ரெயில்வே ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
  • கடந்த சில மாதங்களாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டது.

திருமங்கலம்

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள கள்ளிக்குடியை சேர்ந்தவர் தனபால். இவரது மகன் விக்னேஷ் (வயது 32). ரெயில்வே ஊழியரான இவருக்கு சுபா என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.

கடந்த சில மாதங்களாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டது. இதனால் சுபா கோபித்துக் கொண்டு மதுரையில் உள்ள பெற்ேறார் வீட்டுக்கு குழந்தையுடன் சென்று விட்டார்.மனைவியிடம் பேசியும் அவர் வர மறுத்துவிட்ார். இதனால் மனமுடைந்த விக்னேஷ் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த கள்ளிக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விக்னேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News