உள்ளூர் செய்திகள்

விஷம் குடித்த காதலன் சாவு; காதலிக்கு தீவிர சிகிச்சை

Published On 2022-08-21 08:15 GMT   |   Update On 2022-08-21 08:15 GMT
  • விஷம் குடித்த காதலன் சாவு; காதலிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
  • கீழவளவு சப்- இன்ஸ்பெக்டர் பாலகிரு ஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலூர்

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ளது தெற்கு தெரு. இதனை அடுத்துள்ள பாதரம்பட்டியை சேர்ந்தவர் அஜித் (வயது22) இவரும், தெற்கு தெருவை சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவரும் கடந்த 5 ஆண்டுகளாக காத லித்து வந்தனர்.

இவர்களது காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் கடந்த 4 நாட்களுக்கு முன்பு வெள்ளலூர் அம்பல காரன்பட்டியில் காதல் ஜோடிகள் விஷம் குடித்து விட்டனர்.

இதுகுறித்து அவர்கள் தங்களது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் இருவரையும் மீட்டு மதுரை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அஜித் பரிதாபமாக இறந்து விட்டார். அவரது காத லிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து மேலூர் டி.எஸ்.பி. ஆர்லியாஸ் ரெபோனி உத்தரவின் பேரில் கீழவளவு சப்- இன்ஸ்பெக்டர் பாலகிரு ஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News