உள்ளூர் செய்திகள்

சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது போக்சோ வழக்கு

Published On 2023-04-18 08:12 GMT   |   Update On 2023-04-18 08:12 GMT
  • சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.
  • சிறுமி கர்ப்பமானார்.

மேலூர்

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள உடன்பட்டியை சேர்ந்தவர் குமார்(வயது27), வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். ஒரு வரு டத்திற்கு முன்பு இவருக்கும், மாங்கு ளப்பட்டியை சேர்ந்த ஒரு சிறுமிக்கும் திருமணம் நடந்துள்ளது. இதைத்தொடர்ந்து சிறுமி கர்ப்பமானார். இந்த நிலையில் பிரசவத்திற்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

அப்போது அவருக்கு 18 வயது பூர்த்தியாகமலேயே திருமணம் நடந்தது தெரியவந்தது. இதுகுறித்து டாக்டர்கள் கொட்டாம்பட்டி சமூகநல அலுவலர் பஞ்சு விற்கு தகவல் தெரிவித்தனர். அவர் மேற்கொண்ட விசார ணையில் சிறுமிக்கு குழந்தை திருமணம் செய்து வைத்தது தெரியவந்தது.

இதையடுத்து மேலூர் மகளிர் காவல் நிலையத்தில் சிறுமிக்கு நடந்த திருமணம் குறித்து பஞ்சு புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் கவிதா, இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சாந்தி சிறுமியை திருமணம் செய்த குமார், உடந்தையாக இருந்த தாய் சின்னம்மா, உறவினர் செல்வி ஆகியோர் மீது போக்சோவில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News