உள்ளூர் செய்திகள்

பாம்பு கடித்து மூதாட்டி சாவு

Published On 2023-06-02 07:30 GMT   |   Update On 2023-06-02 07:30 GMT
  • பாம்பு கடித்து மூதாட்டி இறந்தார்.
  • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமங்கலம்

கள்ளிக்குடி அருகே உள்ள உலகாணி சமத்துவபுரத்தை சேர்ந்தவர் கண்னையா. இவரது மனைவி சக்கம்மாள்(58) அதிகாலை வீட்டு வாசல் தெளிக்க வீட்டிற்கு வெளியே வந்தார். அப்போது அவரை பாம்பு கடித்துள்ளது. அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு சக்கம்மாள் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து கூடக்கோவில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News