உள்ளூர் செய்திகள்
- மதுரை அருகே ரெயில் மோதி முதியவர் பரிதாபமாக இறந்தார்.
- நேற்று நள்ளிரவு தண்டவாளத்தை கடக்க முயன்றபோது இந்த சம்பவம் நடந்தது.
மதுரை
மதுரை- கீழ்மதுரை இடையே 60 வயது மதிக்கத்தக்க முதியவர் நேற்று நள்ளிரவு தண்டவாளத்தை கடக்க முற்பட்டார். அப்போது ராமேஸ்வரம்- மதுரை எக்ஸ்பிரஸ் ரெயில் மோதியது. இதில் முதியவர் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முதியவர் பரிதாபமாக இறந்தார்.
அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது பற்றிய விவரங்கள் தெரியவில்லை. இது தொடர்பாக கீழ்மதுரை கிராம உதவியாளர் சமயன் கொடுத்த புகாரின் அடிப்படையில், ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.